வீட்டுத் துஷ்பிரயோகம்

உங்கள் துணைவருடைய அல்லது முன்னாள் துணைவருடைய நடத்தை வீட்டு வன்முறையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் அமைதியற்றதாக இருக்கும். இது யாருக்கும் நிகழலாம் என்பதையும் நீங்கள் செய்த எதுவும் துஷ்பிரயோகத்தை நியாயப்படுத்தாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது உங்களுக்கு அருகிலுள்ள யாராவது ஒருவரை பற்றி நீங்கள் கவலைப்படலாம். வீடுகளில் நிகழ்கின்ற துஷ்பிரயோகம் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய வகையில் இந்த வழிகாட்டல் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் நபரையும் அவரின் பிள்ளைகளையும் பாதிக்கின்றன.

துஷ்பிரயோகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. துஷ்பிரயோகம் செய்யும் துணைவர்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கப்படாத அதிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்த அதிர்ச்சி அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் துஷ்பிரயோகத்தை ஒருபோதும் நியாயப்படுத்தாது. துரதிஷ்டவசமாக, அவர்கள் உறுதியளித்தாலும் கூட, அவர்களிடம் மாறுவதற்கான ஆற்றல் அரிதாகவே உள்ளது.

குற்றவாளிகள் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்த பொதுவான உத்திகளைப் பயன்படுத்துவார்கள். அவர்களின் துஷ்பிரயோகத்தை தொடர்ந்து செய்ய அநேகமாக சட்ட முறைமையை பயன்படுத்துவார்கள். எவ்வாறாயினும், நீதிபதிகள், காவல்துறையினர், ஊடகங்கள், சமூகம் ஆகிய அனைவரும் அத்தகைய குற்றவாளி இயக்கப்படும் தந்திரோபாயங்களையும் நடத்தை முறைகளையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர்.

வீட்டுத் துஷ்பிரயோகம் என்பது தனிப்பட்ட விஷயமல்ல. வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் ஆதரவு அவரின் உயிரைக் காப்பாற்றலாம். அவசர நிலைகளில், 17 என்ற இலக்கத்தின் ஊடாக இல் போலீஸை அழைக்கவும் அல்லது 114 இற்கு SMS அனுப்பவும்.

சாட்சியங்கள்

நான் பிரான்சுக்கு வந்தபோது, நான் பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் எனக்கு பாடம் எடுப்பதை என் வாழ்க்கைத் துணை விரும்பவில்லை. நானும் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. அவர் என்னைக் கவனித்துக் கொள்வதாக சொன்னார். அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினார். ஒவ்வொரு முறை பல்பொருள் அங்காடிக்குச் செல்லும் போதும் அவரிடம் பணம் கேட்க வேண்டியிருந்தது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்தும் கூட, அவரின் ஊடாக உடல் ரீதியான வன்முறை இருப்பதை உணர்ந்து, நான் வெளியேற வேண்டி ஏற்பட்டது. பயணம் நீண்டதாக இருந்தது,ஆனால் என்னால் பிரான்சில் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடிந்தது.

மரியா” - ஆர்ஜென்டினா - 43 வயது

அவர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியபோது, நான் பயந்தேன், நான் எப்படி நடந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் குற்றவாளியாக உணர்ந்தேன், அது என் தவறு என்று நினைத்தேன். நான் இறுதியாக அவரை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, என்னிடம் ஆவணங்கள் இல்லாததால், போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார். நான் முழுவதுமாக மாட்டிக் கொண்டேன், ஆனால் என் அன்பானவர்களிடம் சொல்லக் கூட வெட்கப்பட்டேன். அதிஷ்டவசமாக, எனது உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், எனது பயணத்தில் எனக்கு உதவவும் ஒரு சங்கத்தை நான் கண்டுபிடித்தேன். நான் இன்னும் மீள எழும்புகிறேன்.

“எமெலின்” - ஹைட்டி - 29 வயது

பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதை உணர எனக்கு வெகு காலம் பிடித்தது. திருமணக் கற்பழிப்பு பற்றி மக்கள் அதிகம் பேசுவதில்லை, ஒரு வெளிநாட்டவராக நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பிரெஞ்சுக்காரர், நான் ஒரு வெளிநாட்டவர். எல்லோரும் என்னை நம்பாமல் அவரை நம்புகிறார்கள் என்ற எண்ணம் எனக்கிருந்தது அவர் மிகவும் நல்லவர் என்று எல்லோரும் நினைத்தார்கள்! எங்கள் உறவுக்கு வெளியே அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், எல்லோரும் அவர் நல்லவர் என்றும் நான் நம்ப முடியாத வெளிநாட்டவர் என்றும் நினைத்தார்கள். என் வாழ்க்கையில் அந்தக் காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, நான் எதிர்வினையாற்ற இவ்வளவு காலம் எடுத்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.

“போலா” - போலந்து - 36 வயது

For police intervention:

Scroll to top